[திங்கட்கிழமை, 30 யூலை 2007] யாழ். தெல்லிப்பளை, மல்லாகம், அளவெட்டி, ஏழாலை, சுன்னாகம் பகுதிகளுக்கான மின் இணைப்பு கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுன்னாகம் மின்சார சபை அலுவலகத்தில் முறைப்பாடு செய்த பொதுமக்களிடம் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்துக்கு வர உள்ளமையால் அவருடன் நீங்கள் சென்று பேசினால் கடந்த காலத்தைப் போன்று மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில்தான் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று யாழ். மின்சார சபை பொது முகாமையாளர் சண்முகநாதன் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டக்ளஸ் வருவதற்க்கு 2 நாட்களுக்கு முன்னர் மின்வெட்டை மேற்கொண்டமையானது டக்ளசுக்கு ஆட்சேர்க்கும் ஒரு செயற்பாடு என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Monday, July 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.