Friday, July 20, 2007

புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைத்து பேச்சுக்கு இழுக்கும் மேற்குலகின் திட்டம் மிகவும் கடினமானது - புலனாய்வு இணைத்தளம்

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007] மேற்குலக நாடுகள் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை உடைப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்களை பணிய வைத்து மீண்டும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் அமைதி பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்தலாம் என்று கருதுவதாகவும் புலனாய்வு இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மையில் பிரான்ஸ், பிரித்தானிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இதன் வெளிப்பாடே என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலைப்பின்னலை உடனடியாக உடைப்பது மிகக்கடினமானது என அந்த இணையத் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளாக கருதப்படும் அமெரிக்காவின் சி.ஜ.ஏ, எப்.பி.ஜ மற்றும் இந்தியாவின் ரோ, பாகிஸ்தானின் ஐ.எஸ்ஏ, போன்றன தற்போது மிகவும் பாரதூரமான பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் தமது நாடுகளில் நடத்தப்பட்ட அண்மைய தாக்குதல்கள் எவற்றையும் இந்த உளவுப் பிரிவுகளால் தடுக்க முடியாமல் போயுள்ளது. முன்னைய காலங்கள் போன்றல்லாது உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளை மிக திறமையாக கையாள்வதற்கும் அவர்களின் முயற்ச்சிகளை முறியடிப்பதற்கும் அல் கைடா போன்ற அமைப்புகள் பயிற்சி பெற்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே பிரசித்தி பெற்ற உளவு அமைப்புகள் எல்லாம் தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டங்களையே நம்பியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவத்துள்ளது. உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப தமது கட்டமைப்புகளை போராட்ட அமைப்புகளும் மாற்றி வருகின்றன. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தீவிர செயல்பாட்டாளர்களை அல்லது ஆதரவாளர்களை கைது செய்வதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை முடக்கிவிட முடியாது என்றும் அதற்கான மாற்று திட்டங்களை அவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருப்பார்கள் என்றும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது பதிவு.com

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.