[திங்கட்கிழமை, 30 யூலை 2007] சிறிலங்கா வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்தின் சுற்று நிரூபத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்புவதை முகவர்கள் நிறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்பும் முகவர்கள், அனுப்பும் நபருடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு திணைக்களத்துக்கு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்று அண்மையில் சுற்றுநிரூபம் ஒன்று அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க 220 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் முடிவு செய்துள்ளனர். அந்த அமைப்பின் பொதுச்சபைக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் வெளிநாட்டுக்கு வேலையாட்களை அனுப்புவதை இடைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த 220 பேரும் முடிவு செய்துள்ளதாக எம்.பாரூக் என்ற முகவர் தெரிவித்தார்.
Monday, July 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.