Tuesday, June 26, 2007

கடத்தல் குழுவின் தலைவர் உட்பட ஐவர் தெமட்டகொடையில் பொலிஸாரால் கைது.!!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007] புலனாய்வு பிரிவினர் விசாரணை வெள்ளவத்தையில் வசித்துவந்த தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்தி 54 இலட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொள்ள முயன்ற கடத்தல் குழுவின் தலைவர் உட்பட ஐந்து பேர் கடந்த 23 ஆம் திகதி தெமட்டகொடை சிறிதம்ம மாவத்தையில் வைத்து சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரும் தெமட்டகொøட பொலிசாரும் மேற்கொண்டுவருகின்றனர். கொழும்பு கொள்ளுப்பிட்டியின் லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வைத்து கடந்த 19 ஆம் திகதி கடத்திச்செல்லப்பட்ட இந்த தமிழ் வர்த்தகர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள வீöடான்றினுள் சிறைவைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 23 ஆம் திகதி பொலிசாரினால் மீட்கப்பட்டார். குறிப்பிட்ட தமிழ்வர்த்தகர் வியாபார தேவையின் நிமித்தம் கடந்த 19 ஆம் திகதி வெளியில் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் கைத்தொøலபேசிக்கு கிடைத்த அழைப்பொன்றினையடுத்து கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு சென்றுள்ளார்.இந்த சந்தர்ப்பத்தில் இவர் கடத்தப்பட்டுள்ளார். தமிழ் வர்த்தகரை கடத்திய குழுவினரர் பின்னர் அவரது நண்பர்களுக்கு தொலைபேசியின் மூலம் 54 இலட்சம் ரூபா பணத்துடன் தெமட்டகொடை சிறிதம்ம மாவத்தைக்கு வருமாறு தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி இலக்கம் கிடைத்ததையடுத்து சம்பவம் தொடர்பாக தெமட்டகொடை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிசாரின் ஆலோசனையின் அடிப்படையில் வியூகம் வகுக்கப்பட்டது.வியூகத்தின் அடிப்படையில் தமிழ்வர்த்தகரின் நண்பர் ஒருவர் பணத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றுள்ளனர்.இவர்களை பொலிசார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். குறிப்பிட்ட பிரதேசத்திற்கு தமிழ்வர்த்தகரின் நண்பர்கள் பணத்துடன் சென்றதை அவதானித்த கடத்தல்காரர்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து பணத்தை பெற்றுக்கொள்ளமுற்பட்டபோது பொலிசார் சந்தேகநபர்களை அதிரடி நடவடிக்கைமூலம் கைதுசெய்தனர். சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கொலைசெய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி உறுப்பினரான அம்பிகா என்று அழைக்கப்படுபவரின் சீடர்கள் எனவும் இவர்கள் அம்பிகாவின் நெருங்கியசகா ஒருவரினால் வழிநடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.