[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007]
ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து எதிர்க்கட்சிக்கு மாறிய முன்னாள் அமைச்சர்க ளான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இவ்வாரத்திற்குள் இடம்பெறவுள்ளது.
இவர்களுக்கிடையிலான இந்த முக்கிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்ககுமாரதுங்க இலங்கைக்கு திரும்பும் முன்னர் இடம்பெறவிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இடம்பெறவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் பார்வை மற்றும் ”கூட்டமைப்பு” நிறுவது தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் ரணிலுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்படுகின்ற இணக்கப்பாடுகள்,முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு திரும்ப விருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு மங்கள சமரவீரவினால் எடுத்துரைக்கப்படவிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்களான் மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்திற்கு எதிரான பலமான அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் ஜனநாயக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சிய தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி குருணாகலில் கடந்த 23 ஆம் திகதி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் செயற்பாடுகளை வரவேற்றதுடன் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டமைப்பு அமைப்பதற்காக ஜனநாயகத்திற்காக பேராடுகின்ற அனைவரையும் ஓரணியில் திரட்டப்போவதாகவும் கூட்டமைப்பு அமைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக ரணிலும் மங்களவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்த ஓரிரண்டு வாரத்திற்குள் இந்த சந்திப்பு இடம்பெறவிருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது முன்னால் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இங்கிலாந்தில் தங்கியிருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடுதிரும்பவிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஆளும்தரப்பிலிருந்து எதிர்கட்சிக்கு சென்றுள்ள முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டமைப்பு நிறுவுவது, மங்கள சமரவீர விடுத்துள்ள பகிரங்க அழைப்பு தொடர்பாக ரணிலின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பிலிருந்து எதிர்தரப்பிற்கு மாறியதன் பின்னர் ஆற்றிய உரையில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கும் வகையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகவாதிகள் ஒன்றினைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன். அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டங்களை முன்னெடுக்க முன்னால் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவு வழங்குவதுடன் நாட்டின் நலன் கருதி உருவாக்கப்படும் அணிக்கு தலைமை தாங்க முன்வரவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவுடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க , முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர,ஸ்ரீபதி ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் முடிவில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்டால் கூட்டமைப்பு அணிக்கு முன்னால் ஜனாதிபதி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திஸ்ஸ அத்தநாயக்க கருத்து இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சிக்கும் இடையில் இவ்வாராத்திற்குள் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனினும் சந்திப்பு நடைபெறும் தினத்தை சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது.
இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. அந்த செயற்பாடுகளுக்கு எதிர்கட்சி தரப்பிலிருந்து கிடைக்கின்ற ஆதரவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சிகள் இணைந்து கூட்டமைப்பு அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் இடம்பெறவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் பார்வை மற்றும் ”கூட்டமைப்பு” நிறுவது தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சி தலைவர் ரணிலுடனான பேச்சுவார்த்தையில் எட்டப்படுகின்ற இணக்கப்பாடுகள்,முடிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு திரும்ப விருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவிற்கு மங்கள சமரவீரவினால் எடுத்துரைக்கப்படவிருப்பதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர்களான் மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்திற்கு எதிரான பலமான அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) மற்றும் ஜனநாயக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பகிரங்கமாக அறிவித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சிய தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி குருணாகலில் கடந்த 23 ஆம் திகதி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் செயற்பாடுகளை வரவேற்றதுடன் அரசாங்கத்திற்கு எதிரான கூட்டமைப்பு அமைப்பதற்காக ஜனநாயகத்திற்காக பேராடுகின்ற அனைவரையும் ஓரணியில் திரட்டப்போவதாகவும் கூட்டமைப்பு அமைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக ரணிலும் மங்களவும் பகிரங்கமாக அழைப்பு விடுத்த ஓரிரண்டு வாரத்திற்குள் இந்த சந்திப்பு இடம்பெறவிருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்படாலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது முன்னால் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இங்கிலாந்தில் தங்கியிருக்கின்ற முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடுதிரும்பவிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் ஆளும்தரப்பிலிருந்து எதிர்கட்சிக்கு சென்றுள்ள முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.அந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டமைப்பு நிறுவுவது, மங்கள சமரவீர விடுத்துள்ள பகிரங்க அழைப்பு தொடர்பாக ரணிலின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னால் அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பிலிருந்து எதிர்தரப்பிற்கு மாறியதன் பின்னர் ஆற்றிய உரையில் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்கும் வகையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனநாயகவாதிகள் ஒன்றினைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன். அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டங்களை முன்னெடுக்க முன்னால் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவு வழங்குவதுடன் நாட்டின் நலன் கருதி உருவாக்கப்படும் அணிக்கு தலைமை தாங்க முன்வரவேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவுடன் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க , முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர,ஸ்ரீபதி ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் முடிவில் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டமைப்பு அமைப்பதற்கான இணக்கம் காணப்பட்டால் கூட்டமைப்பு அணிக்கு முன்னால் ஜனாதிபதி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திஸ்ஸ அத்தநாயக்க கருத்து இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னால் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சிக்கும் இடையில் இவ்வாராத்திற்குள் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனினும் சந்திப்பு நடைபெறும் தினத்தை சரியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது.
இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டு வருகின்றது. அந்த செயற்பாடுகளுக்கு எதிர்கட்சி தரப்பிலிருந்து கிடைக்கின்ற ஆதரவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையில் ஜனநாயகத்திற்கு ஆதரவான கட்சிகள் இணைந்து கூட்டமைப்பு அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன என்றார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.