Saturday, June 30, 2007

கம்பளையில் ஆணின் சடலம் மீட்பு.

[சனிக்கிழமை, 30 யூன் 2007] சிறிலங்காவின் கண்டி மாவட்டம் கம்பளை, கஹட்டப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள மதகு ஒன்றின் கீழ் ஆண் ஒருவரின் சடலத்தினை கம்பளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கஹட்டப்பிட்டிய பாடாலைக்கு அருகில் அமைந்துள்ள மதகு ஒன்றின் கீழ் இச்சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை கண்டு எடுக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச வாசிகள் இன்று அதிகாலை சடலம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனையடுத்தே சடலத்தினை காவல்துறையினர் மீட்டனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலத்தையே தாங்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கும் காவல்துறையினர், இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.