Wednesday, June 27, 2007

செயலிழந்து போன சிறிலங்காவின் காவல் மற்றும் நீதித்துறை: மனித உரிமைகள் ஆணையம் சாடல்.!!

[புதன்கிழமை, 27 யூன் 2007] சிறிலங்காவின் காவல் மற்றும் நீதித்துறை அமைப்புகள் செயலிழந்து போயிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் சாடியிருக்கிறது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோர்களுக்கு ஆதரவளிப்பது என்ற ஐ.நாவின் அனைத்துலக நாளை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை: சிறிலங்காவில் கடத்தலகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்தல், துன்புறுத்தல்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது சிறிலங்கா காவல் துறை மற்றும் நீதித்துறை ஆகியனசெயலிழந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் ண்டுவருவதற்கோ எந்த சட்டபூர்வமான நடைமுறைகளும் சிறிலங்காவில் இல்லை. அங்கு உள்ள சட்டத்துறை வன்முறைகளை குறைப்பதற்கான நடைவடிக்கைகளை எடுப்பதில்லை. மாறாக தற்போதைய நிலைமைகளை மேலும் மோசமாக்கவே அது உதவி வருகின்றது. சிறிலங்கா அரசாங்கமும் தற்போதைய வன்முறைகளை கட்டுப்படுத்துவதை விடுத்து அதனை மேலும் மோசமாக்கி வருகின்றது. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இந்த சட்ட நடைமுறைகளின் சீர்குலைவானது அரசாங்கத்தின் அரசியல் தளத்தின் சீர்குலைவுக்கு வழிவகுத்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.