Tuesday, June 26, 2007

புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம்.!!

[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கலத்திலிருந்து சக்தி வாய்ந்த ராடார் கைப்பற்றப்பட்டபோது இது தெரியவந்துள்ளது. அது ஜப்பானிய தயாரிப்பு என்று பாதுகாப்பு தரப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் 250 குதிரை வலுத்திறன் கொண்ட 4 யமஹா இயந்திரங்கள் அந்தக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது என்றும் அவை ஜப்பானிய தயாரிப்பு என்றும் இத்தகைய இயந்திரங்கள் அரசாங்கத்தின் உரிய அனுமதி இல்லாமல் கொண்டுவர முடியாது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். விடுதலைப் புலிகளின் கலம் ஒன்றில் முன்னர் 14.5 எம்.எம். டிவின் பரெல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை சீனத் தயாரிப்பு என்பதால் சீன அரசாங்கத்தின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.