Saturday, June 30, 2007

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.!

[சனிக்கிழமை, 30 யூன் 2007]


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சி நெல்லியடி முடக்காட்டுப் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தென்மராட்சி சாவகச்சேரி வரணியைச் சேர்ந்த நித்தியானந்தன் (வயது 48 ) என்ற குடும்பஸ்தர் கொல்லப்பட்டார்.
அவரது சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மந்திகை மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ். மடத்தடிப் பகுதியில் இன்று மாலை நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். மருத்துவமனையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து யாழ். கொக்குவில் இராமநாதன் வீதியில் ஈருளியில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது மாலை 6 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு நபர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியோடி விட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.