Friday, February 16, 2007

ஐக்கிய தேவியக்கட்சி ஆட்கடத்தல்களுக்கு கண்டனம்.

[வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2007]

அப்பாவிப் பொதுமக்கள் கொழும்பு மற்றும் ஏனையபகுதிகளில் கடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் கண்டிமாவட்ட ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல நேற்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் இருந்து பத்திரிகைக்கு விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழர்கள் கடத்தப்படுகிறார்கள் நாளை சிங்களவர்கள் கடத்தப்படுவார்கள் எனவே நாம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அநேக தமிழ் முன்னணி வர்த்தகர்கள் அவ் ஆட்கடத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்