Saturday, January 27, 2007
அரசாங்கத்தில் இணையும் ஐதேக உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
Saturday, January 27, 2007
சிறீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 18 நாடாளுமன் உறுப்பினர்கள் நாளை சிறீலங்கா அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார்
அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவிற்கு கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.






