[Sunday January 28 2007 ] வவுனியா வேப்பங்குளம் பகுதியில், துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் இரண்டு பொதுமக்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.நேற்று சடலமாக மீட்கப்பட்ட இருவரும், சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதனிடையே கடந்த கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள், அங்கிருந்து உடமைகளை அடித்து நொருக்கி துவம்சம் செய்ததோடு, வீட்டில் இருந்த தந்தையையும், மகனையும் கோரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டோர், ஐம்பது அகவையுடைய முருகையா, அவரது புதல்வரான இருபத்து மூன்று அகவையுடைய சசிதரன் ஆகியோர் என தெரிய வருகின்றது.





