கொழும்பு துறைமுகப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற சம்பவங்கள் சிறீலங்கா அரசாங்க தரப்பால் மூடிமறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறீலங்கா தலைநகரின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தினுள் ஊடுருவிய மூன்று படகுகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட குறிப்பிட்ட சில கடற்கலங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது
துறைமுகத்தினுள் இருந்த சிலரின் தகவல்களின் அடிப்படையினல் நான்கு பாரிய குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
எனினும் துறை முகத்தினுள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் கொழும்பு துறை முகத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் வெளிநாட்டு கப்பல் நிறுவனங்களுக்கு ஏற்படும் என்பதுடன் கொழும்பு துறை முகத்திற்கு செல்வதற்கான காப்புறுதி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என்று சிறீலங்கா அரசாங்கம் அச்சமடைந்துள்ளது
இதன் காரணமாகவும் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளை சிங்கள மக்களும் எதிரணி அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சிப்தை தடுக்கும் நோக்கிலும் சிறீலங்கா அரசாங்கம் துறை முனத்தில் இடம்பெற்ற உண்மை சம்பவங்களை மூடிமறைக்க முற்படுவதாக கொழுமப்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது






