வல்வெட்டத்துறை மக்கள் வங்கிக்கு முன்பாக உடுப்பிட்டிக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடையில் நேற்று மாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும், இருவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இதுதொடர்பில் சிறீலங்கா இராணுவம் உத்தியோகபூர்வமான எந்தவித அறிவித்தலும் விடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனபோதும் சிறீலஙடகா இராணுவத்தினர் அவ்இடத்தை அண்டியபகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.






