[சனிக்கிழமை, 27 சனவரி 2007]
சிறிலங்கா தலைநகரில் உள்ள கொழும்பு துறைமுகத்தைத் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றைத் தாம் இன்று காலையில் முறியடித்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன.
அதிவேகப் படகுகள் மூலம் வந்து துறைமுகத்தைத் தாக்குவதற்கு விடுதலைப் புலிகள் முற்பட்டதாகவும், இவ்வாறு விடுதலைப் புலிகள் வந்த படகுகளில் ஒன்று கடற்படையினரது தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர்.
மூன்று படகுகளிலேயே விடுதலைப் புலிகள் வந்ததாகவும், அவற்றில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய இரண்டு படகுகள் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளைக் கடற்படையினர் முடுக்கிவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது பற்றிய மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திலும், அதனையடுத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. முப்படையினரும் அப்பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவிருந்தது.
Saturday, January 27, 2007
கொழும்பு துறைமுக தாக்குதல் முறியடிப்பு: சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தகவல்
Saturday, January 27, 2007





