Friday, January 26, 2007

சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு இலங்கை அரசுக்குத் தெரிவிப்பு

ஆட்கள் காணாமற் போகின்ற சிக்கலுக்கு பயங்கரவாதத் தடுப்பு விதிகளே காரணம். சர்வதேச ஜூரிகள் ஆணைக்குழு இலங்கை அரசுக்குத் தெரிவிப்பு [Friday January 26 2007 ] [uthayan.com] இலங்கையில் ஆட்கள் பலவந்தமாகக் காணாமல் போகச் சொய்யப்படுகின்ற சிக்க லுக்கு பயங்கரவாதத் தடுப்பு ஒழுங்கு விதிகள் என்ற பெயரில் இலங்கை அரசு கொண்டு வந்திருக்கின்ற சட்ட ஏற்பாடுகளே பிரதான காரணம். இவ்வாறு ஜெனிவாவை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச ஜூரர்களின் ஆணைக்குழு (International Commission Of Jurists) தெரிவித்திருக்கின்றது. ஆகவே, இந்த சட்ட விதிகளை இலங்கை அரசு மீளாய்வு செய்ய வேண்டிய அவ சரமும், அவசியமும் எழுந்திருப்பதாகவும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கின்றது. வலோற்காரமாக ஆட்கள் காணாமற்போகச் செய் யும் கொடூரத்திலிருந்து அனைவரையும் பாதுகாப்ப தற்கு உறுதியளிக்கும் 2006 டிசம்பர் 20ஆம் திகதி ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டயத்தில் (சர்வ தேச சாசனத்தில்) ஒப்பமிட்டு, அந்த சாசனப் படி முழு அளவில் செயற்படுவதற்கும், அந்தப் பட்டயத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவதற்கும் இணங்குமாறும் இவ்வாறு ஆட்கள் பலவந்தமாகக் காணாமற் போகச் செய்யும் சிக்கலுக்கு அதன் மூலம் முடிவு கண்டு நிலைமையைச் சீரடைய வைக்கு மாறும் சர்வதேச ஜூரர்களின் ஆணைக்குழு நேற்றுமுன்தினம் இலங்கைக்கு விடுத்த பகிரங்க வேண்டுகோளில் கோரியிருக்கின்றது. இலங்கையில் ஆட்கள் பலவந்த மாக காணாமற்போகச் செய்யும் பிரச்சினைக்கு அவசரக்காலச் சட்டவிதிகளும், பயங்கர வாதத் தடுப்புச் சட்டமுமே பிரதான காரணங்கள் என்பதை ஐ.நா. செயலணிக்குழு 1999 இலேயே தெளிவாக வெளிப்படுத்தி யிருப்பதை சுட்டிக்காட்டும் சர்வதேசஜூ ரர்கள்; ஆகவே, தற்போதைய பயங்கரவாதத் தடுப்பு ஒழுங்கு விதிகளை மறுசீரமைக் கும்படியும் இலங்கை அரசைக் கேட்டிருக் கின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில கால மாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந் ததை கவனத்தில் கொண்டுள்ள அந்த அமைப்பு, அதேசமயம் அந்தச் சட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள் 2006 டிசம் பரில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒழுங்கு விதிகளின் மூலம் மீளக்கொண்டு வரப் பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது. பாதுகாப்புத் தொடர்பான இந்தச் சட்டவிதிகள் குறித்து இலங்கை அரசும், நாடாளுமன்றமும் உடனடியாக மீளாய்வு செய்யவேண்டியது அவசியமானது என் றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. காணாமற்போதல் தொடர்பான சர்வ தேசப் பட்டயத்தை இலங்கை ஏற்று ஒப்ப மிட்டு நடைமுறைப்படுத்துவதன் அவசி யத்தை வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, இலங்கையில் காணமால்போதல் பிரச் சினை தொடர்பான சரித்திரத்தை நோக்கும் போது, இத்தகைய சர்வதேச பட்டயத் தில் இலங்கை ஒப்பமிடுவது சரித்திர முக் கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக இருக் கும். அப்படிச் செய்வதன் மூலம் இத்தகைய கொடூரக் குற்றங்களை அரசு சகித்துக்கொள் ளாது என்ற அரசியல் செய்தியை அரசு வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையின் சிக்கல்கள் பற்றிய சரித் திரத்தை மேற்கோள்காட்டிய அந்த அமைப்பு, 1980களில் ஐ.நா. செயலணிக்குழு ஒன்றுக்கு 13 ஆயிரம் பேர் காணாமற்போனதைப் பற் றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என் பதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இலங்கையில் தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு இடங்களில் ஆட்கள் காணாமற் போகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து கிடைத்து வருவதையும் அந்த அமைப்பு தெரிவித் துள்ளது.