படுவான்கரை நோக்கி சிறீலங்கா படைகள் அகோர ஏறிகணைத் தாக்குதல் மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான் கரை நோக்கி சிறீலங்கா படைகள் எறிகணை மற்றும் பல்குழல் வீச்சுக்களை நடத்தியுள்ளனர் குடும்பி மறை வவுணதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதேவேளை திகிலிவெட்டை பெண்டுகள் சேனை பிரதேசங்களை நோக்கியும் நேற்றைய தினம் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் குடியிருப்புகள் பல அழிவடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





