Tuesday, October 31, 2006
கப்பல் மூலமே குடாநாட்டிற்கு இனிமேல் பொருட்கள்......
ஆயுதக் குழுவிரால் 11 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
வடமராட்சியில் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை.
கோரிக்கைகளை ஏற்க முடியாது-சிறிபால் டி சில்வா
நோர்வே இரு தரப்பினரிடமும் கோரிக்கை.
வன்னியிலிருந்து 46 மீனவர் குருநகரரை சென்றடைந்தனர்.
எரிபொருள் பற்றாக்குறை போக்குவரத்துக்கள் முடக்கம்.
இரு சடலங்கள் மீட்பு.
Monday, October 30, 2006
24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை.
மழைக்கு இருக்க முடியாது திண்டாடும் மக்கள்.
யாழ்பாணத்தில் மருந்தகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை.
பெரும் மனித அவலம் உருவாகும் -ஜூலியன் வில்சன்.
விடுதலை புலிகளின் கோரிக்கைக்கு விரைவில் .....
புலிகளின் பேச்சுக் குழுவினர் உடனடியாக வன்னி திரும்புவர்
சிவநாதன் கிஷோர் வீட்டின் தாக்குதல்.
Sunday, October 29, 2006
சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை...
ஊடகவியலாளர்களை வெளியேற்றக் கோரினராம்
பேச்சுக்கள் படுதோல்வியில் முடிவடைந்துள்ளன.
படையினரின் ஆத்திரமுட்டும் ...
படையினரின் ஆத்திரமுட்டும் நடவடிக்கை பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் -இளந்திரையன்.
வட போர்முனையில் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் பாரிய படை நகர்விற்கான முயற்சிகள் என்பன விடுதலைப்புலிகளை ஆத்திரமுட்டும் செயலாகும் என சுவிஸ் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் இராணுவ பேச்சாளர் இ.இளந்திரையன் ஊடகம் ஒன்றிற்கு இன்று காலை தெரிவித்துள்ளார்.
இவ் ஆத்திரமுட்டும் நடவடிக்கை மூலம் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் இளந்திரையன் எச்சரித்துள்ளார்.தீர்வுகான அரசு இழுத்தடிப்பு பேச்சுக்கள் முறியும் நிலை.
துப்பாக்கி பிரயோகத்தில் குழந்தை ....
வாழைச்சேனையில் இளைஞன் சுட்டுக்கொலை.
ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தயாராகும் படையினர்.
கொம்மாந்துறை படைமுகாம் கட்டளைத் தளபதி.....
மட்டக்களப்பு கொம்மாந்துறை படைமுகாமின் கட்டளைத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை 12.30 மணியளவில் இவர் இனம் தெரியாத ஆயுதாரிகளால் கிழக்குப் பல்கலைக்கழகம் அருகே சுடப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் 42 அகவையுடைய விஜெதுங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுமுறைக்காச் சென்ற சமயமே இவரை ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
Saturday, October 28, 2006
இருதரப்பினர் மீதும் சொல்ஹெய்ம் விசனம்
அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி சோதனை
முதல்நாள் பேச்சுக்களில் எந்த பயனும் ஏற்படவில்லை
படையினர் எறிகணைத் தாக்குதல்.
துரத்தும் கருணா குழுவினரின் அடாவடித்தனம்!
யுத்த நிறுத்தத்தை சிறீலங்கா அரசு மீறி விட்டது
கடந்த காலபேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் .....
தமிழ்செல்வன் தலைமையில் சுவிஸ் பேச்சுக்கள் தொடங்கின
நான்கு தரப்பினர் இப்பேச்சுக்களில் கலந்து கொண்டு இருக்கின்றனர் விடுதலைப்புலிகள்,சிறீலங்கா ,நோர்வே ,யுத்த நிறுத்த கண்காணிப்பாளர் என 4 தரப்பினர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் காவல்துறைப்பொறுப்பாளர் நடேசன்,இராணுவப் பேச்சாளர் இளந்திரையன்,மகளிர் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் தமிழ்விழி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் மிகவும் இறுக்கமான நிலையில் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.படையினர் மீது கிளைமோர் தாக்குதல் 3காவல்துறையினர் காயம்.
மூதூர் மல்லிகைத்தீவில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.
வடபோர் முனையில் நேற்று மாலை மோதல் .....
முறக்கொட்டாஞ்சேனையில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை.
கருணா குழுவினர் மீது துப்பாக்கி பிரயோகம்.
அக்கரைப்பற்றில் அதிரபடையினர் மீது கிளைமோர் தாக்குதல்.
நிகழ்ச்சிநிரலினை ஏற்படுத்துவதில் இரு தரப்பும் இழுபறி
சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை......
Friday, October 27, 2006
படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு
போக்குவரத்து வாரத்தில் மூன்று தினங்கள் நடைபெறும்
அநுராதபுரத்தில் கிளைமோர் குண்டு வெடிப்பு
அழுத்தம் கொடுக்க வேண்டும் -எஸ்.கஜேந்தரன்
கிளாலி கடற்பகுதியில் நேற்று அதிகாலை மோதல்.
சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
சிறிலங்காவின் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பாடசாலைகளுக்கு அச்சுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இதனையடுத்து பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நத்தார் நாள் நிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் பேசவல்ல சிறில் காமினி பெர்னாண்டோ கூறுகையில், அச்சுறுத்தல்கள் மூலம் நத்தார் நாள் நிகழ்ச்சிகளை தடை செய்வது என்பது ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும். இந்த நாட்டில் எந்த மதத்தினரும் தங்களது மத நிகழ்வுகளை நடத்த உரிமை உண்டு என்றார்.
பேச்சு தொடர்பான பரப்புரையில் அரசுத்தரப்பு முழுக்கவனம்
சிக்குன் குனியா என மக்கள் மத்தியில் பீதி
Thursday, October 26, 2006
மீட்டியா கொட சந்தேகநபர்கள் சுட்டுக்கொலை
யாழ்பாணத்தில் பாடசாலை மாணவியைக் காணவில்லை.
கப்பல் பயணத்திற்கு அலையும் யாழ்.மக்கள்.
இளைஞன் ஆயுதாரிகளால் சுட்டுக்கொலை.
யாழ் குடா நாட்டில் பட்டினியால் தவிக்கும் மாணவர்கள்.
தமிழீழ சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம்...
கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!
விடுதலைப் புலிகளின் தூதுக்குழு ஜெனீவா சென்றடைந்தது.
ஏறாவூரில் குண்டு வெடிப்பு ஆறு பொதுமக்கள் படுகாயம்.
சோதனைச் சாவடிக்கள் மீது தாக்குதல்.
இலங்கை-அமெரிக்க கடற் கூட்டுப் பயிற்சி.
ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் உதவி.
கொழும்பு துறைமுகத்தை அண்டிய மேற்கு பிரதேச கடலில் ....
Wednesday, October 25, 2006
வடக்கு - கிழக்கு மாகணங்களில் பூரண ஹர்த்தால்
கடைகளில் உள்ள பொருள்கள் கொள்ளை.
கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள்..
களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள்
மட்டக்களப்பில் பூரண நிர்வாக முடக்கம்.
நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது
பட்டினிச்சாவை எதிர்நோக்கும் இடம்பெயர்ந்துள்ள.......
ஊரடங்கை நீக்க முன்னரே கிளைகள் முன் மக்கள் கியூவில்
புலிகளின் பேச்சுக்குழுவில் இரா.உருத்திரகுமாரன்
Tuesday, October 24, 2006
பொன்சேகாவுடன் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு சந்திப்பு
"இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை சரத் பொன்சேகா மற்றும் இந்திய இராணுவ இராஜதந்திரிகள் விவாதித்தனர்" என்று சிறிலங்காவின் இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அம்பாறையில் பேரூந்து விபத்து: பன்னிரண்டு பேர் காயம்.
மிதிவெடியில் சிக்கி அதிரடிப்படைச் சிப்பாய் படுகாயம்.
வடமராட்சி கிளைமோர் தாக்குதல்:
யாழ்ப்பாணத்தில் உள்ளுர் உற்பத்திக்கு ஊக்குவிப்பு.
யாழ்ப்பாணத்தில் உணவுத் தட்டுப்பாடு.
பேச்சின் வெற்றியிலேயே ஏ9 பாதை திறப்பு தங்கியுள்ளது
பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு
பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை ஏற்படுத்த இணைப்பு அடிப்படையாக அமையும் ஜே.வி.பி., ஹெலஉறுமயவை புறக்கணிக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் இணைந்து கொண்டமையானது நாட்டில் பயங்கரவாதத்தை தோற்கடித்து நிரந்தர சமாதானத்தை கொண்டு வருவதற்கு அடிப்படையாக அமையும். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்பட முன்வந்தமையானது தெற்காசிய நாடுகளின் அரசியல் கலாசாரத்தில் முக்கியத் திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கம் ஐ.தே. க.வுடன் இணைந்து செயற்படும் என்பதற்காக என்னை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறச் செய்த ஜே.வி. பி. யினையும் ஜாதிக ஹெலஉறுமயவையும் நான் புறக்கணித்ததாக அர்த்தப்படாது. அந்த கட்சிகளுடனான எமது சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறினார். ஐ.தே.க.வும் சுதந்திரக்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது: இன்றைய தினம் தெற்காசிய நாடுகளின் அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்பும்னையாகும். அரசியல் கட்சிகளை விட நாடே முக்கியம் என்ற அடிப்படையில் இருப்பிரதானக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன. எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் பிரதான பிரச்சினையை தீர்ப்பதற்கு அனைவரும் முன்வந்துள்ளோம்.
பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ தமது வரப்பிரசாங்களுக்காக முக்கியத்துவம் கொடுக்காது நாட்டின் பிரதான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். இன்றைய இந்த நிகழ்வை எமது நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகவே கருதுகின்றேன். நாங்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிலர் எம்மை அவதானமாக செயற்படும்படி கூறினர்.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் இவ்வாறான யோசனைகள் கிடைத்திருக்கும் என்று நான் கருதுகின்றேன். ஆனால் நாட்டின் முக்கிய பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாட்டில் காலடிவைத்துள்ளோம். நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்து மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதற்கு இரு பிரதானக் கட்சிகளும் முனைப்புடன் செயற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இரு பிரதானக் கட்சிகளின் ஒன்றிணைவின் மூலம் நன்மைகளும் தீமைகளும் ஏற்படலாம். ஆனால் நாம் நாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்காக ஜே.வி.பி., ஜாதிக ஹெலஉறுமயவும் கணிசமான பங்களிப்பை வழங்கின. தற்போது எமது அரசாங்கம் ஐ.தே.க. வுடன் பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இணைந்துகொண்டுள்ளது.
அதற்காக மேற்படி இருக்கட்சிகளையும் நாங்கள் புறக்கணித்ததாக அர்த்தம் கொள்ளக்கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலத்திலேயே நாம் இருக்கின்றோம். இந்நிலையில் இந்த இருக்கட்சிகளுடனான எமது சுமுகமான உறவுதொடர்ந்து நீடிக்கும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு வளமுள்ள அமைதியான நாடொன்றை கையளிக்க வேண்டிய எமது பொறுப்பாகும்.
அதற்கான முயற்சிகளே நாம் எடுத்து வருகின்றோம். இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைவதற்காக இருகட்சிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட இரண்டு குழுவினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இன, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவரும் செயற்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சீனப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். இருப்பினும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் சந்திப்பையும் பொருட்படுத்தாமல் உடனடியாக நாடு திரும்பினார். அவரின் அர்ப்பணிப்பை நான் பாராட்டுகின்றேன்.மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில்....
மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில் ஆராயப்படும் விடுதலைப்புலிகள் அறிவிப்பு
ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்து கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் ஜெனீவா நோக்கிப் பயணிப்பார்கள் என புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்ரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று நண்பகலுக்கு முன்னர் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகப்டரில் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு வந்து ஜெனீவா நோக்கி பயணிப்பார்கள் எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் இன்று முகம் கொடுத்து வரும்மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆராயப்படும் என தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அழைத்து வருவதற்காக நோர்வேயின சிறிலங்காத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் இன்று காலை வன்னி புறப்பட்டுச் சென்று அவர்களை கொழும்க்கு அழைத்துச் சென்றுள்ளதாக தூதரகப் பேச்சாளர் கூறினார்.
இதேநேரம் அரசாங்க தூதுக்குழுவில் ஒரு பகுதியினர் இன்றும், எஞ்சியவர்கள் நாளையும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளனர். பேச்சுக்களில் மத்தியஸ்தர்களாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம், நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் மற்றும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளதுடன் சுவிஸ்லாந்தின் இலங்கைக்கான தூதுவரும் பங்குபற்றுவர்ர். என நோர்வே தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவாரன லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையில் கண்காணிப்புக்குழுவினரும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்ற உள்ளனர்.ஜெனீவாவில் அரசும் விடுதலைப்புலிகளும்....
விடுதலைப்புலிகளின் பேச்சுக் குழுவினர் ஜெனீவா பயணம்.
இன்று காலை 10.00மணியளவில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுபாபளர் சு.ப தமிழ்ச் செல்வன் தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர் இக்குழுவில் தமிழீழ காவல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன், ஆகியோர் அடங்குகின்றனர்.
ஜெனீவாப் பேச்சில் கலந்துகொள்வதற்கென கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக ஜெனீவாவிற்கு புறப்படவுள்ளனர்.சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ்பிறட்ஸ்கர் விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் உலங்கு வானூர்தியில் பயணிக்கிறார்.Monday, October 23, 2006
50 சிறுவர்கள் கருணா துணை ஆயுதக் குழுவினரால் கடத்தல்.
வவுனியாவில் வெவ்வேறு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொலை.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
செப்ரெம்பர் 15 ஆம் நாள் முதல் இரு கட்சிகளிடையேயான பேச்சுக்கள் தொடங்கின. அமைதி முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தம், நல்லரசு, தேசக் கட்டமைப்பு, கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட 4 சுற்றுப் பேச்சுக்களின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலை 10 மணியளவில் அமைச்சரவையைக் கூட்டி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மகிந்த ஒப்புதல் பெற்றார்.பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்து பரிந்துரையை முன்மொழிந்தார். அதனையடுத்து மங்கள சமரவீர இதனை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.சேருநுவப் பகுதியில் இளைஞன் சுட்டுப் படுகொலை.
கருணா குழுவினரால் மேசன் தொழிலாளி சுட்டுக்கொலை.
மட்டக்களப்பில் எறிகணை வீச்சு.....
விடுதலைப் புலிகளுக்கு உலங்கு வானூர்தி ஏற்பாடு.





