பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது.





