நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் புகுந்து ஒட்டுக்கூலிக்குழு அடாவடித்தனம். உவர்மலை, கீழ்கரை வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களின் வீட்டிற்கு நேற்றுச்சென்ற ஒட்டுக்கூலிக்குழுவைச்சேர்ந்தவர்கள், அங்கு அவரை வெருட்டும் தொனியில் பேசியதுடன், அவரது வீட்டினை தாம் தமது கட்சியின் அலுவலகமாகவும் பாவிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் இவர்கள் வாக்குவாதம் புரிந்து இச்சம்பவம், திருமலை உதவி காவல்துறை மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மேற்படி ஒட்டுக்குழுவினைச்சேர்ந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது





