Friday, December 29, 2006

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம்..

சம்பூர் அனல்மின் நிலையத்துக்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் திருகோணமலை சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படவுள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் மின் சக்தி மற்றும் எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.வி. சாபி கைச்சாத்திடுவார். இந்தியாவின் தேசிய நிறுவனமான தேசிய அனல் மின்சக்தி நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளன. இத்திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தினால் 350 அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப்படவுள்ளதுடன் எஞ்சிய 150 அமெரிக்க டொலர்களை இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் (என்.டி.பி.சி.) நிறுவனமும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்திற்கான நிர்மாணப் பணிகள் 2010 ஆம் ஆண்டு நிறைவடையும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தும் கலந்து கொள்ள விருக்கின்றனர். மேற்படி அனல் மின் நிலையத்தை அண்மித்த பகுதியிலும் திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த இலங்கை துறைமுக அதிகார சபை கடற்படை தலைமையகமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளது.