Thursday, December 28, 2006

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவை கைதுசெய்ய..

சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்தவை கைதுசெய்ய உத்தரவு சிறீலங்காவின் குற்றப்புலனாய்வு பிரிவினரை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. மகிந்த ராஐபக்ஸ தனதும் தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக 500 மில்லியன் ரூபாசெலவில் பதுங்குகுழி அமைத்து வருவதாக சண்டே லீடர் கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை இக் கைது உத்தரவையடுத்து பத்திரிகையாளர்கள், லசந்தவின் பணியகத்தை சூழ்ந்துள்ளனர் என அறியமுடிகிறது. அண்மையில் பயங்கரவாத தடைச்சட்டம் சிறீலங்கா அரசுத்தலைவர் மீள அமுல்படுத்தப்பட்டதையடுத்து இதுபோன்ற கைதுகள், பத்திரிகையாளர்மீதான நெருக்கடிகள் அதிகரிக்கும் என சுதந்திர பத்திரிகையாளர் அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் அச்சம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.