வடமராச்சியில் கைக்குண்டு தாக்குதல் ஒரு இராணுவம் பலி – 1 மாணவன் காயம் பருத்தித்துறை வீதியில் மந்திகை இருந்து 1 கிலோமீற்றர் மேற்காக அமைந்துள்ள மடத்தடி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் உந்துருளியில் சென்ற இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் 1 இராணுவமும் மற்றும் ஒரு மாணவனும் காயடைந்துள்ளதாக அறியமுடிகிறது காயமடைந்தவர் 19 அகவையுடைய ஜெயசிங்கம் ஈழவேந்தன் என இனம் காணப்பட்டுள்ளார்.





