Sunday, December 24, 2006

மட்டக்களப்பு இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு

மட்டக்களப்பு கரடியனாற்றுப்பகுதியை நோக்கிய இராணுவ தாக்குதல் முயற்சி முறியடிப்பு கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் துணைஆயுதக் கூலிக்குழுக்களுடன் சேர்ந்து சிறீலங்கா இராணுவத்தினர் மட்டக்களப்பு கறுப்பு பாலப் பகுதி, செங்கலடி இராணுவமுகாமில் இருந்து விடுதலைப்புலிகளின் கரடியனாறு பகுதிநோக்கி மேற்கொண்ட இராணுவதாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலால் இப்பகுதியில் இருவீடுகள், வீட்டுத்தோட்டம், வயல்கள் என்பன சேதமடைந்துள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.