ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானிக்கும்சர்வதேச நிபுணர் குழுவுக்கு அமெரிக்க பிரதிநிதி சிபார்சு
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அவதானிக்கும் சர்வதேச நிபுணர் குழுவிற்கு அமெரிக்க அரசாங்கமும் பிரதிநிதியொருவரை சிபார்சு செய்துள்ளது.ஜீன் டீவே என்பவரே இக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டவராவார்.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையையடுத்தே அமெரிக்கா தனது பிரதிநிதியை சிபார்சு செய்துள்ளது.
எமது தெரிவாக ஜீன் டீவேயின் பெயரை நாம் இலங்கை அரசிற்கு பரிந்துரைத்துள்ளோம். ஆயினும் இதுகுறித்து இதுவரைக்கும் இலங்கை அரசின் பதில் எமக்குக் கிடைக்கவில்லை. நாம் தற்பொழுது எமது தெரிவு என மேற்படி நபரை இலங்கை அரசிற்கு பரிந்துரைத்துள்ளோம். இதற்கு இணங்கி இலங்கை அரசு தமது பதிலை எமக்கு அனுப்பிய பின்னரே ஜீன் டீவே இலங்கை வருவார் என அமெரிக்க தூதரக பேச்சாளர் கேசரிக்குத் தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் சனத்தொகை மற்றும் அகதிகள் விவகாரங்கள் தொடர்பாக பிரதி இராஜாங்க செயலாளராக பணியாற்றியுள்ள ஜீன் டீவே அமெரிக்க இராணுவத்தின் அரசியல் இராணுவப் பிரிவின் தலைவராக பென்டகனில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவரது தெரிவு குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கூறுகையில்;ஜீன் டீவே இந்த ஆணைக்குழுவில் முக்கிய பங்காற்றுவார் என நாம் எதிர்பார்க்கிறோம்.
அத்தோடு இந்த விசாரனை ஆணைக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களை புலனாய்வு செய்து மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் மீண்டும் இவ்வாறான குற்றங்கள் நடைபெறாமல் இருக்கவும் நடவடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார்.
virakesari.lk
Saturday, December 23, 2006
நிபுணர் குழுவுக்கு அமெரிக்க பிரதிநிதி சிபார்சு
Saturday, December 23, 2006





