Saturday, December 23, 2006

கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள் வைத்திருப்பின் ...

கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள் வைத்திருப்பின் அவற்றை ஒப்படைக்கவும் தமிழீழ காவல்துறை வேண்டுகோள் தமிழீழ வரம்பினுள் கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்களையாரேனும் வைத்திருப்பின் அவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழீழ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது பற்றி தமிழீழ காவல்துறை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் படையினாலோ அல்லது ஆயுதக்குழு வினலோ கைவிடப்பட்ட படைக்கலப் பொருட்கள், இராணுவ சீருடைகள் அல்லது அதனது பாகங்கள், அதனு டன் தொடர்புடைய பொருட்கள் எவற் றினையாவது தமிழீழ விடுதலைப்புலி களது தலைமைச் செயலகத்தின் எழுத்தினாலான ஒப்புதல் இன்றி யாராவதுகையகப்படுத்தல் அல்லது கையளித்தல் அல்லது கையாட்சி யில் வைத்திருத்தல் அல்லது அழித்தல் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் அல்லது வேறிடத்திற்கு கொண்டு செல்லல் அல்லது விற்றல் அல்லது வாங்குதல் அல்லது அவற்றில் ஏதாவது செயலைச் செய்ய முயலுதல் அல்லது அவற்றிற்கு உடந்தையளித்தல் என்பன தமிழீழ தேச உடைமைகள் காப்புச் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே படைக்கலன் சார்ந்த பொருட்கள், இராணுவ சீருடைகள் ஏதாவது இருப்பின் அவற்றினை எதிர்வரும் 23.01.2007ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு தமிழீழ காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அனுமதி இன்றி யாராவது குறித்த பொருட்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.