Friday, December 22, 2006

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் ...

வாகரையிலிருந்து புலிகளை வெளியேற்ற முற்பட்டால் முழுஅளவிலான யுத்தம் வெடிக்கும் விடுதலைப் புலிகள் எச்சரிக்கை கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டால் மிக மோசமான அழிவுகளைச் சந்திக்கும் யுத்தத்தை சந்திக்க நேரிடும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று ரொயிற்றர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றும் படைநடவடிக்கை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என சிறீலங்கா தேசியப் பாதுகாப்பு ஊடக மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளிட்டதற்கு பதிலக்கும் வகையில் தமிழ்ச்செல்வன் இக்கருத்தினை ரொயிற்றர் செய்திக்கு தெரிவித்துள்ளார். வாகரையிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றும் முயற்சியில் சிறீலங்காப் படைகள் ஈடுபட முனைந்தால் அது போர்ப் பிரகடனத்திற்கும் முழு அளவிலான யுத்தம் வெடிப்பதற்கும் வழிகோலும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறீலங்கா அரசின் யுத்தவெறியால் முழுஅளவிலான யுத்தம் வெடித்து நாட்டை மிகவும் மோசமான அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் எனவும் தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.