மட்டக்களப்பில் 19 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் மட்டக்களப்பு கொறகாலைமடு கிரன் பகுதியில் நேற்று புதன்னிழமை இரவு 9 மணியளவில் தனியார் வாகனம் ஒன்றில் பயணித்த 16 ஆண்சிறார்களும் 3 பெண்சிறார்களும் கருணா ஒட்டுக்கூலிக்குழு என நம்பப்படும் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்கள் இதுபற்றி மேலும் தெரியவருகையில் காத்தான்குடி பொலநறுவை வீதியில் இச் சம்பவம் இடம்பெறறுள்ளதாகவும், இப்பகுதி சிறிலங்கா இராணுவத்தின் அதிகளவான பாதுகாக்பிற்கு உட்பட்ட பகுதி என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதைதொடர்ந்து 6 பிள்ளைகளின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்கள். பதிவு.com





