Thursday, November 30, 2006

பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிகாந்தா பதவியேற்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிகாந்தா பதவியேற்பு யாழ்மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கே.என்.சிறிககாந்தா சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம்.லொக்குபண்டார முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார். கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி கொல்லப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஐ; அவர்களின் வெற்றிடத்திற்கே இவர் பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகாந்தா யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதிதுவப்படும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். சட்டத்தரணியான இவர் டெலோ அமைப்பின் முக்கியஸ்தராகவும் முன்னர் முதல்வராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது