Tuesday, October 31, 2006

இரு சடலங்கள் மீட்பு.

மட்டக்களப்பு ஏறாவூரில் கைகள்கட்டப்பட்ட நிலையில் இரு சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட பகுதியான சத்திருக்கொண்டான் பகுதியில் நேற்று திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றார்கள். இதில் ஒருவர் தன்னாமுனை பகுதியினை சேர்ந்த கிருஷ்ட்டி வயது 28 என அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை.சடலங்கள் மட்டக்களப்பு வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருவரின் கைகளும் கட்டப்பட்ட நிலையில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.