Friday, October 27, 2006

சிக்குன் குனியா என மக்கள் மத்தியில் பீதி

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான சிக்குன்குனியா நோய் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் பரவிவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மன்னாரில் இனங்காணப்படாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.தினமும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முப்பது முதல் நாற்பது பேர்வரை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும் ஆனால், நோய் என்னவென்று இனங்காணமுடியாமல் உள்ளது என்றும் வைத்தியசாலை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சைபெற வந்தவர்களின் இரத்தம் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால், அதைப் பரிசோதனைசெய்து நோயைக் கண்டுபிடிக்கக்கூடிய வைத் தியவசதிகள் இலங்கையில் இல்லை யெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதுபெரும்பாலும் சிக்குன் குனியா நோயாகவே இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இதனால் சிகிச்சைபெற வருபவர்களுக்கு பன டோல் மாத்திரைகளே வைத்தியசாலை யில் வழங்கப்படுகின்றன என்றும் வேர்க் கொம்பு, மரமஞ்சள் மற்றும் நன்னாரி வேர் போன்ற அவிமருந்துகளைப் பாவிக்குமாறு வைத்தியர்கள் நோயாளி களுக்கு ஆலோசனை கூறுகின்றனர் என்றும் நோயால் பாதிக்கப்படுபவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை தலைநகர் கொழும்பு உட்பட இன்னும் சில இடங்களிலும் இனங்காணப்படாத இந்தநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சிக்குன் குனியா நோயைக் கண்டுபிடிக்க கூடிய வைத் திய வசதிகள் இலங்கையில் இல்லாததால் வைத்தியர்கள் இந்நோயை உறு திப்படுத்த முடியாமல் உள்ளனர்.