Thursday, October 26, 2006

கொழும்பு துறைமுகத்தை அண்டிய மேற்கு பிரதேச கடலில் ....

வெள்ளவத்தை முதல் வத்தள உஸ்வட்டகேயாவ கடற்பரப்பில் படகுகள் நடமாடுவதற்குத் தடை. கொழும்பு துறைமுகத்தை அண்டிய மேற்கு பிரதேச கடலில் படகுகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். இதனடிப்படையில் வெள்ளவத்தை முதல் வத்தள உஸ்வட்டகேயாவ பகுதிவரையிலான பகுதிகளில் டிங்கு படகுகள் மற்றும் சிறிய படகுகளின் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. எனினும் முத்துவெல் கடல்பகுதி முதல் களனி ஆறு வரையிலான பகுதியில் மீன்பிடி உட்பட்ட பல்நோக்க படகுகளின் நடமாட்டங்களுக்கு காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படவுள்ளது.