வடமராட்சி துன்னாலையில் உள்ள லூர்த்து மாதா தேவாலயத்திற்க அருகாமையில் வைத்து நான்கு பிள்ளளைகளின் தந்தை இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிப்பிரயோகத்திற்கு உள்ளாகி பலியாகியுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டு வேலியை அடைத்துக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் இதில் பலியானவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயது நிரம்பிய இராமலிங்கம் தவத்துரை என்பவராகும்





