Tuesday, October 31, 2006

கோரிக்கைகளை ஏற்க முடியாது-சிறிபால் டி சில்வா

விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது-சிறிபால் டி சில்வா சமாதான பேச்சுக்களில் முன் வைக்கப்பட்ட புலிகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இன்று நாடு திரும்பிய அரசின் பேச்சு வார்த்தை குழுத்தலைவர் சிறிபால்டி சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிற்கு மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். பேச்சுக்களில் பங்கேற்ற அரச குழுவின் ஒரு தொகுதியினர் இன்று நாடு திரும்பியுள்ளார்கள்.இவர்கள் இன்று மாலை ஐனதிபதி மகிந்த ராஐபக்சவிற்கு பேச்சு வார்த்தை குறித்து எடுத்துரைப்பதுடன் சுவிஸ் பேச்சுக்கள் சம்பந்தமாக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளனர்.