ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இங்கு வந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் முன்னர் திட்டமிட்டவாறு நோர்வேக்குச் செல்லமாட்டார்கள்.போக்குவரத்து ஏற்பாடுகளைப் பொறுத்து அனேகமாக இன்னும் இரண்டொரு நாள் களில் அவர்கள் வன்னிக்குத் திரும்புவர். கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சமாதானப் பேச்சுக்ககள் சுமுகமாக நடைபெறும் பட்சத்தில் நோர்வே சென்று, பல நாடுகளில் இருந்தும் வந்துசேரும் விடுதலைப் புலிகளின் அரசமைப்பு நிபுணர் குழுவைச் சந்தித்து கலந்துரையாடுவதற்குப் பேச்சுக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். எனினும் ஜெனிவாப் பேச்சுக்களில் எவ்வித முன்னேற்றமும் இன்றித் தோல்வியில் முடி வடைந்தததால் ஏற்கனவே திட்டமிட்டவாறு நோர்வேக்குச் செல்லாமல் உடனடியாகவே தாயகம் திரும்புவதற்கு இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது





