வடபோர் முனையில் மற்றுமொரு ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தயாராகும் படையினர். வடபோர் முனையில் தொடர்ந்தும் படைகள் மற்றும் கனரக ஆயுதங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.கடந்த சில நாள்களாக படைக்குவிப்பு நடைபெற்று வருகின்ற அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் புலிகளின் முன்னரங்க நிலைகள் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி ஆட்லறி மற்றும் பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தி வந்த படையினர் இன்று ஞாயிறு காலையில் தமது எறிகணை வீச்சுக்களை அதிகரித்து உள்ளனர். அதே வேளை தென்மராட்சியின் மீசாலை,கச்சாய்,கொடிகாமம்,எழுதுமட்டுவாள் பகுதிகளில் சிறீலங்கா படையினரால் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பாரிய ஆக்கிரமிப்பு போரை தொடுத்த போதெல்லாம் இவ்வாறு படைகுவிப்புகளையும், ஊரடங்கு சட்டம் பிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது





