வடபோர் முனையில் நேற்று மாலை மோதல் முன்னரங்க பகுதிக்கு கனரக ஆயுதங்கள் நகர்வு. வடபோர் முனையில் முன்னரங்க பகுதியில் நேற்றுமாலை புலிகளிற்கும் படையினரிற்கும் மத்தியில் ஒருமணி நேரமாக மோதல்கள் இடம்பெற்று உள்ளன. இதனிடையே கடந்த சில நாட்களாக முன்னரங்க பகுதிகளை நோக்கி சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்களை நகர்தி வருகின்றனர் என பொது மக்கள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி படைத் தளத்தில் இருந்து கனரகவாகனங்களில் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறிஉத்துகணைகள் என்பன பெருமளவில் முகமாலைப்பகுதி நோக்கி நகர்த்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.





