அக்கரைப்பற்றில் இன்று காலை 10.45க்கு அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில் உள்ள மதுரசா பள்ளிவாசலுக்கு அருகில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 2 விசேட அதிரடிப்படை படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அதிரடிப்படை மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 7 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





