Friday, October 27, 2006

பேச்சு தொடர்பான பரப்புரையில் அரசுத்தரப்பு முழுக்கவனம்

தென்னிலங்கையின் தனியார் ஊடக நிறுவனங்கள் பலவற்றைச் சேர்ந்த செய்தியாளர், படப்பிடிப்பாளர்கள் அடங்கிய பெரும் ஊடகப் பரிவாரம் ஒன்றையும் இம்முறை அரசுத்தரப்பினர் தங்களோடு அரச செலவில் ஜெனி வாவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அரச ஊடகங்களுக்கு மேலதிகமாக தெற்கின் சிங்கள, ஆங்கிலமொழி ஊட கங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான செய்தியாளர்கள் அடங்கிய அணி ஒன்றை அரசு ஜெனிவாவுக்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அர சுடன் முரண்படாத சிங்கள, ஆங்கில தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந் தவர்களே இந்த அணியில் அதிகம் இடம்பெற்றிருக்கின்றனர் என்று கூறப் படுகிறது. ஜெனிவாப் பேச்சு மேசையில் தங் களுக்குச் சாதகமான நிலையை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கிலான பெரும் பரப்புரைத் திட்டத்துடனேயே அரச செலவில் பெரும் எண்ணிக்கையான ஊடகவிய லாளர்களை அரசுத்தரப்பு ஜெனிவாவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று அங்குள்ள சுயாதீன ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். கடந்த முறை ஜெனிவாப் பேச்சுகளின்போது அரசுத்தரப்புத் தகவல்கள் சரியான முறையில் ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யப்படாததால் பேச்சு மேசையில் அரச பேச்சுக்குழு பலவீன மான ஒரு தோற்றத்தைக் காட்ட நேரிட்ட தாக விமர்சனங்கள் வெளியாகி இருந் தமை தெரிந்ததே. இதனைக் கருத்திற் கொண்டே இந்தத் தடவை அரசு நேர காலத்துடன் பெரும் ஊடகப்பரிவாரம் ஒன்றையும் தம்மோடு தயார் நிலையில் ஜெனிவாவுக்குக் கூட்டி வந்திருக்கிறது. அரசுக்குச் சார்பான அரசுடன் முரண் படாத ஊடக நிறுவனங்கள் ஊடாக தென்னிலங்கை மக்களுக்கு செய்திகள் எட்டுவதை உறுதிப்படுத்தவே அரசு இவ்வாறு திட்டமிட்டு ஊடகவியலா ளர்களை அழைத்து வந்திருக்கிறது என வும் சுட்டிக்காட்டப்படுகிறது.இதற்கிடையில் கடந்த தடவை அரச பேச்சுக் குழு வினரிடம் பெற்ற அனுபவம் காரணமாகவே புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் இந்தத் தடவை பேச்சுக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார் என்று அரச பேச்சுக் குழு உறுப்பினர்கள் சிலர்தமக்குள் கூறிக்கொள்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. புலிகளின் மதியுரைஞர் அன்டன் பால சிங்கம் சுகயீனம் காரணமாக இம் முறை பேச்சுக்குழுவில் இடம்பெற வில்லை என்பது தெரிந்ததே.ஆனால், இதற்கு வேறுவிதமாகக் காரணம் கற்பிக்கும் அரசபேச்சுக் குழுவின் சில உறுப்பினர்கள், அரச பேச்சுக் குழுவின் வலுவை எதிர்கொள்ளத் திரா ணியற்றே பாலசிங்கம் இம்முறை பேச் சுக்கு வராமல் தவிர்த்துக் கொண்டார் என்று கூறிக்கொள்கின்றனர் என்று ஜெனிவாவில் தகவல் வெளியாகியிருக் கிறது. uthayan.com