Thursday, October 26, 2006

தமிழீழ சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம்...

தமிழீழ சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. தமிழீழத்தில் சிறுவர்களின் நலன்களைப் பேணும் சட்டம் தமிழீழ நீதிநிர்வாகத்துறையின் சட்டவாக்கல் செயலகம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு அமைய சகல சிறுவர்களும் 11ம் தரம் வரை கல்வி பயில வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழீழ ஆயுதப் படையில் 17 அகவைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்பட முடியும் என்றும் தமிழீழ சிறுவர் நலன்பேணும் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது.