Thursday, October 26, 2006

கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டும் மற்றும் 7பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயப்பட்டவர்களின் ஐவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கருணா குழுவில் கொல்லப்பட்டவர்கள் வாசு,அருணன்,மனோ, இவர்களின் மூவரின் சடலம் வெலிக்கந்தை பகுதியில் உள்ள அவர்களின் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயப்பட்டவர்கள் பொலநறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.