மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட ஏறாவூர் 5ம் குறிச்சி தமிழ் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிளவில் குண்டு வெடிப்பில் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் 5ம் குறிச்சியில் வீட்டிற்கு அருகில் உள்ள சிறு தோட்டத்தில் கீரை பிடுங்க சென்ற வேளையில் அங்கு மறைத்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளதாக தெரியவருகின்றது. குண்டு வெடிப்பில் தர்சினி வயது 18, சாந்தி வயது 14, ருஷான் வயது 12, ராஜ்குமார் வயது 01, ராஜேஸ்வரி வயது 40, யசோதா வயது 14, ஆகியோர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்





