Thursday, October 26, 2006

சோதனைச் சாவடிக்கள் மீது தாக்குதல்.

திருக்கோவில் பிரதான பொலிஸ் நிலையத்தின் முதலாம் மற்றும் மூன்றாம் சோதனைச் சாவடிகள் நேற்றிரவு 8.00க்கு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது . உந்துருளியில் வந்தவர்கள், குறித்த பொலிஸ்காவலரன்கள் மீது கிரனைட் வீச்சு நடாத்தி விட்டு துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசாருடன் அருகிலுள்ள விசேட அதிரடிப்படையினரும் இணைந்து, மக்கள் குடிமனைகள் மீது, சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகவும் இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.