அமெரிக்க கடற்படையினர் இந்த மாத இறுதியில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இதன்போது சுமார் ஆயிரம் படையினரும் கடற்கலங்கள் சகிதம் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். இந்த பயிற்சிகளானது இலங்கையின் தென்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகயின் ஒரு கட்டமாகும் என ஐ.ஏ.என்.எஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தியாவின் முப்படை தளபதிகளுக்கும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடடளை தளபதி வில்லியம் ஜே போலனுக்கும் இடையில் இந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் ஐ.ஏ.என்.எஸ் செய்திசேவை குறிப்பிட்டுள்ளது.





