Wednesday, October 25, 2006

வடக்கு - கிழக்கு மாகணங்களில் பூரண ஹர்த்தால்

வடகிழக்கு இணைப்புக்கு எதிர்ராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியானால் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு கிழக்கு பகுதியில் வழமை நிலை பாதிப்படைந்துள்ளது. மன்னாரில் வர்த்தக நிலையங்கள் போக்குவரத்துகள் ஸ்தமிதம் அடைந்திருந்தது. . யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு வவுனியா திருமலை போன்ற இடங்கள் அரசு அழுவலகங்கள் , பாடசாலைகள் , கடைகள் , வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்படிருந்தன .. இதேவேளை போக்குவரத்து சேவைகள் நடைபெறவில்லை இதனால் வீதிகள் வெறிசோடி கிடந்தன அம்பாறை மாவட்டத்திலும் இதே நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.