சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் கடைகளில் உள்ள பொருள்கள் கொள்ளை. யாழ் நகரில் உள்ள வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்ளால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படுகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யாழ் நகரின் பிரதான வீதிகளில் உள்ள எட்டுக் கடைகள் இவ்வாறு படைப் புலனாய்வாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு கொள்ளையிடப்படும் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.





