மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இராணுவம் ஒட்டுக்குழுக்கின் மிரட்டலுக்கு மத்தியிலும் பூரண நிர்வாக முடக்கம் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கை பிரிக்க கோரி சிறிலங்காவின் உச்ச நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆட்சேபித்து வடகிழக்கு பூராக நிர்வாக முடக்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நிர்வாக முடக்கம் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதில் முற்று முழுதாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை இராணுவ கட்டுப்பாட்டு பகுதில் வர்த்தக நிலைகள் அலுவலகங்கள் போக்குவரத்து சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்த நிலையில் போக்குவரத்தினையும் வர்த்த நிலையங்களையும் திறக்குமாறு ஆயுதக்குழுக்கள் மிரட்டி வருகின்றார்கள். என அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் பிரதேச செயலங்கள் பாடசாலைகள் வங்கிகள் வைத்தியசாலைகள் என்பன செயலற்றுள்ளது. வீதியில் மக்கள் நடமாற்றமின்றி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





