Tuesday, October 24, 2006

பொன்சேகாவுடன் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு சந்திப்பு

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய இராணுவப் பயிற்சித்துறை இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அலுவாலியா நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இந்திய இராணுவ அதிகாரிகளான கேணல் பங்கஜ் சக்சேனா, லெப்.கேணல் எஸ்.சி.ரானா ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர். "இரு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களை சரத் பொன்சேகா மற்றும் இந்திய இராணுவ இராஜதந்திரிகள் விவாதித்தனர்" என்று சிறிலங்காவின் இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.