Tuesday, October 24, 2006

மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில்....

மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சில் ஆராயப்படும் விடுதலைப்புலிகள் அறிவிப்பு ஜெனீவாப் பேச்சுக்களில் கலந்து கொள்ளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் ஜெனீவா நோக்கிப் பயணிப்பார்கள் என புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்ரர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தூதுக்குழுவினர் இன்று நண்பகலுக்கு முன்னர் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகப்டரில் கிளிநொச்சியிலிருந்து கொழும்பு வந்து ஜெனீவா நோக்கி பயணிப்பார்கள் எனத் தெரிவித்த அவர் தமிழ் மக்கள் இன்று முகம் கொடுத்து வரும்மனிதாபிமான பிரச்சினைகள் குறித்தே பேச்சுவார்த்தையில் முக்கியமாக ஆராயப்படும் என தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அழைத்து வருவதற்காக நோர்வேயின சிறிலங்காத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் இன்று காலை வன்னி புறப்பட்டுச் சென்று அவர்களை கொழும்க்கு அழைத்துச் சென்றுள்ளதாக தூதரகப் பேச்சாளர் கூறினார். இதேநேரம் அரசாங்க தூதுக்குழுவில் ஒரு பகுதியினர் இன்றும், எஞ்சியவர்கள் நாளையும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளனர். பேச்சுக்களில் மத்தியஸ்தர்களாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெம், நோர்வேயின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் மற்றும் இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளதுடன் சுவிஸ்லாந்தின் இலங்கைக்கான தூதுவரும் பங்குபற்றுவர்ர். என நோர்வே தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவாரன லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் தலைமையில் கண்காணிப்புக்குழுவினரும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்ற உள்ளனர்.