Thursday, October 26, 2006

ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் உதவி.

இலங்கையில் இடம்பெயர்தோருக்கு உதவ ஐரோப்பிய ஆணைக்குழு 5 மில்லியன் உதவி. இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள சுமார் இரண்டு லட்சம் பேருக்கு உதவவென ஐரோப்பிய ஆணைக்குழு ஐந்து மில்லியன் யூரோக்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இந்த நிதியானது இடம்பெயர்ந்துள்ள சுமார் 80 ஆயிரம் மக்களுக்கு கூடாரங்களை அமைப்பதற்கும், குடிநீர் விநியோகத்திற்கும் மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் நிகழும் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள அவசர தேவைகளை கருத்திற்கொண்ட இந்த உதவியை தாம் மேற்கொள்ள முன்வந்ததாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலியன் வில்சன் நேற்றுத் தெரிவித்துள்ளார்.